இராமியணஅள்ளி கிளை நூலகம் சார்பில் உலகப் புத்தக நாள் விழா இன்று சந்தபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. ச.ஜவகர் தலைமை வகித்தார்.
உடற்கல்வி ஆசிரியர் திரு. வேடியப்பன் வரவேற்புரை வழங்கினார். நூலகர் தீ. சண்முகம், ஆசிரியர் திரு. தங்கமணி, விடுதி காப்பாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். நில அளவை ஆய்வாளர் திரு. அண்ணா குபேரன் மாணவர்களும் நூலகமும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கடத்தூர் கிளை நூலக நூலகர் சி. சரவணன் பரிசு வழங்கினார். முடிவில் ஆசிரியர் அரங்கன்னல் நன்றி கூறினார்.