Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி.

தருமபுரி வட்டார வள மையம் சார்பில் பிறப்பு முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வரும் 30.4. 2022ஆம் தேதி காலை 9:30 மணி முதல்  பிற்பகல் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம் முகாமில் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி 27.4.2002 அன்று நடைபெற்றது.

இப்பேரணியை தருமபுரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) தொடங்கிவைத்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியயர்கள் அனைவரும் இப்பேரணியில் பங்கேற்றனர்.

இப்பேரணி நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி நகராட்சி அலுவலகம் கடைவீதி வழியாக சென்றது, 30.4.2022 அன்று நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித் தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884