இதையொட்டி, இரண்டாம் நாளான இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து பென்னாகரம் விநாயகர் கோயில் அருகில் இருந்து கூத்தப்பாடி, மடம், கே.அக்ராகரம், அளேபுரம், குள்ளாத்திரம்பட்டி, பொச்சாரம்பட்டி, சின்னப்பநல்லூர் உள்ளிட்ட ஏழு ஊரை கிராம மக்கள் ஒன்றிணைந்து காவிரி புனித நீர் மட்டும் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் வாணவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஏழூர் கட்டாடமணி கவுண்டர் ஏழு ஊர் கவுண்டர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வில் சுமார் 3000 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
.gif)

