தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 217301 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொறுத்து விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. மத்திய அரசு தற்போது திட்டநிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, இதுவரை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும்.
தற்போது விவசாயிகள் 11-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது அவசியமாகும், தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்கள் வங்கி கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்துடன் சென்று இணைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

