சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்தநாளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி. இந்நிகழ்வில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் அரசாங்கம், நல்லம்பள்ளி ஒன்றிய குழு பெருந்தலைவர் பெரியசாமி, வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் கார்த்திகேயன் என பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
.gif)

