Type Here to Get Search Results !

தடங்கம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியை சேர்ந்தவர் தாமஸ் (வயது41). தொழிலாளி. இவர் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் ராட்டினம் அமைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். 

தடங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை கடந்தபோது மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies