தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் குறித்தும், கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்கொள்ளபட்டு வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று பாலக்கோடு வட்டம், சோமான அள்ளி பகுதியில் குடிநீர் விநியோகம், சோமான அள்ளி கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் தருமபுரி வட்டம், அன்னசாகரம் பகுதியில் உள்ள தருமபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டாக சாலையின் நியாயவிலைக் கடை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் இன்று (30.04.2022) திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்குச் திடீரென சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அவ்விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவர்களிடம் கலந்துரையாடி, நாள்தோறும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு குறித்தும், அரசு நிர்ணயித்து பட்டியலிட்டுள்ளதன் படி நாள்தோறும் உணவு வழங்கப்படுகின்றதா என்பதையும், மாணவர்களுக்கு விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து விடுதி மாணவர்களுக்கு உணவ சமைத்து வழங்குவதற்கு இவ்விடுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசி, பருப்பு, மளிகைப் பெருட்கள், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விவரம் குறித்தும், இருப்பு குறித்தும் அதற்கான பதிவேடுகளை ஆய்வு செய்தர். பின்னர் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவின் தரம் குறித்து அவ்வுணவினை உண்டு தரத்தினை பரிசோதித்தார்.
பின்னர், விடுதிகளில் தங்கி பல்வேறு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு அளித்துள்ள பட்டியலின்படி, தவறாமல் உணவுகளை தரமாக வழங்குவதோடு, அனைத்து விடுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக எற்படுத்தி, அதனை தொடர்ந்து பாதுகாத்து, பரமரிப்பதோடு, விடுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு அரசின் விதிமுறைகளின்படி அரசு அளித்துள்ள பட்டியலின்படி, விடுதி மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவுகளை வழங்காதது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன. ராஜராஜன், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.அசோக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.