Type Here to Get Search Results !

ஏரியூர் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பேருந்து நிலையம் முன்பு சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ படத்திற்கு அவரின் 131 வது பிறந்தநாளான இன்று தமிழ் புலிகள் கட்சி மற்றும் திமுக மற்றும் ஆதித்தமிழர் பேரவை சார்ந்த கட்சியினர் ஏரியூர் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு திமுக சார்பில் தொட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுஞ்சல்நதம். தலைமை தாங்கி சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் திருஉருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரிய அம்பேத்கரிய பகுத்தறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதில் கட்சி நிர்வாகிகள்  தமிழ் புலிகள் கட்சி முனுசாமி மாவட்ட செயலாளர் வீராசாமி மாவட்ட துணை சையலே மாயக்கண்ணன் சேட்டு வைத்திஸ் ராஜி இளநீராஜா முருகன் பாக்யராஜ் கலந்துகொண்டனர் ஆதி தமிழ்லேர் பேரவையின் சார்பாக செல்வம் சரவணன் சுப்பிரமணி திமுக ராஜேந்திரன் வார்டு கவுன்சிலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்  மற்றும்  கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies