Type Here to Get Search Results !

பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு.

தமிழ்நாடு மாநில உணவுபாதுகாப்பு துறை ஆணையர் மருத்துவர் திரு.பி.செந்தில்குமார், ஐ.ஏ.ஏஸ் அவர்கள், கடந்த சில தினங்களாக ஊசி போடும் சிரஞ்சில், சாக்கலேட் நிரப்பி விற்பனை செய்யப்படுவதாக பத்திரிக்கைகள் ஊடகங்களில் வந்த தகவல் மற்றும் பெறப்பட்ட புகார் சார்ந்து உரிய ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் திருமதி. திவ்யதர்ஷினி, ஐ.ஏ.ஏஸ் அவர்களின் ஆலோசணைப்படி மாவட்டம் முழுதும் ஒன்றியம் வாரியாக உணவு பாதுகாப்பு துறையினர திடீர் ஆய்வு செய்துவருகின்றனர். சில தினங்களாக தர்மபுரி, காரிமங்கலம், கடத்தூர் பகுதிகளில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் திருமதி. ஏ.பானு சுஜாதா எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் , காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் இன்று பாலக்கோட்டில் பேருந்து நிலையம், எம்.ஜி. ரோடு மற்றும் தர்மபுரி ஒசூர் ரோடு பகுதிகளில் உள்ள குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்கலெட்கள், மிட்டாய் வகைகள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

இன்றைய ஆய்வில், சிரஞ்ச் சாக்கலேடகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் 10க்கும் மேற்பட்ட கடைகளின் ஆய்வில் சில கடைகளில் இருந்து கலப்பட தேயிலை பாக்கட்கள் 5 கிலோ, கலர் போட்டி,வத்தல் பத்து கிலோ,  காலாவதியான மற்றும் உரிய லேபிள் நடைமுறை பின்பற்றாத அதாவது உரிய தயாரிப்பு முகவரி மற்றும் தயாரிப்பு, முடிவு தேதி இல்லாத மிக்சர் பாக்கட்கள், மிட்டாய்கள், பிஸ்கெட்கள், நிப்பட் உள்ளிட்ட கார, இனிப்பு தின்பண்டங்கள்  10 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 

மேலும் ஒரு கடையில் உரிய கம்பெனி லேபிள், தயாரிப்பு முடிவு தேதி இல்லாத சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் கேன்கள் பத்துக்கு மேற்பட்டவை பறிமுதல் செய்யப்பட்டு நீர் அப்புறப்படுத்தப்பட்டது, மேற்படி தவறுக்கும், உரிய முகவரி மற்றும் முடிவு தேதி இல்லாத உணவு பொருள் விற்றமைக்கும் மேம்பாட்டு நோட்டீஸ் மற்றும் உடனடி அபராதம் ஆயிரம் வீதம் 5 கடைகளுக்கு ஐந்து ஆயிரம் அபராதம் விதித்தனர். 

மேலும் இது போன்ற  பாக்கட்களில் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி இல்லாத உணவு பொருள்கள், சாக்கலேட்கள்,  மிட்டாய்கள், துரித தின்பண்டங்கள், குடிநீர் கேன்கள், ரஸ்னா, ஆரஞ்ச் போன்ற குளிர்பான பாக்கட்கள், பெட் பாட்டில்கள், ஐஸ் டியுப்  மற்றும் காலாவதியான, தரமற்றவைகளை மொத்த விற்பனையாளர்கள், சிறு வணிகர்கள் கண்டிப்பாக தவிர்க்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர். 

மேலும் அனைத்து உணவு வணிகர்களும் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருத்தலுடன் முறையாக புதுப்பிக்கவும் வலியுறுத்தப்பட்டது. கரோனா தொற்று தவிர்க்க  முககவசங்கள், கிருமி நாசினி , தடுப்பூசி, சமுக இடைவெளி உள்ளிட்டவை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தினர். நுகர்வோர்கள் உணவு பொருள் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற  எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884