Type Here to Get Search Results !

மூங்கப்பட்டி ஸ்ரீ ஊர் மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மூங்கப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில்  திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழாவானது கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று  அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார், முன்னதாக விநாயகர், கொல்லாபுரி அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு தட்டுவரிசை எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும் அம்மனுக்கு ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். 

கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு  அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது, இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர், நாட்டு கவுண்டர் , ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies