Type Here to Get Search Results !

கிராம சபை தீர்மானங்கள் நிறைவேற்றப்படததால் கிராமசபை ரத்து.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிர்நாயக்கனஅள்ளி ஊராட்சிஉட்பட்ட  வெங்கட்ராமன் கோட்டாய்,  மாரியம்மன் நகர், முல்லை நகர், வீரபத்திரன்புதூர், ரோஜாநகர் உள்ளிட்ட 10மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் மின்சாரம் விளையாட்டு திடல் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், பழைய கட்டிடங்கள் பராமரிப்பு உள்ளிட்ட எந்த அடிப்படை தேவைகளும் இதற்கு முன் நடந்த கிராமசபை கூட்டங்களில் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. 

அதன் பின்பு கடந்த ஒரு ஆண்டுகளாகியும்எந்த ஒரு அடிப்படை வசதிகள் ஊராட்சி சார்பில் செய்து தரப்படவில்லை, இந்த நிலையில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் கூடியது பொதுமக்கள் மற்றும் பத்தலஅள்ளிதலித் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் AE அன்பழகன். கிராம நிர்வாக அலுவலர் ரத்திணவேல்  உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர். 

பத்தல அள்ளி கிராம பகுதியை சேர்ந்த தலித் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாததால் தொடர்ந்து இரண்டு கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றியது ஆதலால் இந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் எந்த பலனும் இருக்காது ஆகையால் முன்பு போடப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி பிறகு தற்போது தீர்மானங்கள்  இந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என தீர்மானம் எழுதின பொதுமக்களிடம் வாசித்தனர் இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மற்றும் அவருடைய கணவர் செந்தில்குமார் தலித் மக்களை இக்கூட்டத்தில் இருந்து வெளியேற ஒருமையில் பேசினார்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சரிவர கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதில் துப்புரவு பணியாளர்கள் காவலர்கள்  பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை இதற்கு காரணம் சரிவர துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களிடையே கொண்டுசேர்க்கும் இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884