Type Here to Get Search Results !

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாவது அலகால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு நாள்தோறும் குடிநீர் கிடைக்கும் ஜி.கே. மணி பேட்டி.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்  2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சா் கே.என்.நேரு அறிவித்தார், வாரச்சந்தை அமைய உள்ள இடத்தை  பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி பாப்பாரப்பட்டி பகுதியில் அமைய உள்ள வார சந்தையை அதிகாரிகளோடு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 கடைகள் கட்டப்பட உள்ளது. சந்தை குறித்து முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உடனடியாக பணியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாவது அலகு 4600 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதற்கான திட்ட அறிக்கைகள் தயாராகி வருகிறது. 

இத்திட்டம் நிறைவேறும் பொழுது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டகளில் உள்ள நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் குடியிருக்கும் நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஜி.கே.மணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர் பாடி செல்வம், தொகுதி அமைப்பு செயலாளர் சுதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார் பாமக நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராஜா உலகநாதன், கோவிந்தசாமி, பேரூராட்சி தலைவர் பிருந்தா மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies