Type Here to Get Search Results !

போதை ஊசிகள் விற்ற வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை பகுதியில் கடந்த மாதம் பெங்களூருவில்  இருந்து போதை ஊசிகளை வாங்கி விற்பனை செய்வதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். 

இதையடுத்து போதை ஊசிகள் விற்றதாக வழக்கில் கைதான மையில் கொட்டாய் பகுதியை சேர்ந்த வஜ்ரவேல் (வயது42), சாமிரெட்டிப்பட்டி அடுத்துள்ள கமலநத்தம் பகுதியை சேர்ந்த முருகேசன் (46) ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதியமா ன்கோட்டை போலீசார் போதை ஊசிகள் விற்றதாக கைதான இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884