Type Here to Get Search Results !

குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் பிரதி மாதம் 2ஆம் சனிக்கிழமைகளில் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர்.


சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற மண்டல அளவிலான மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் 'தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் விதி 2013'-ஐ நடைமுறைப்படுத்தும் விதிகளின்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய முறையில் எவ்வித தாமதமுமின்றி, அவரவர் குடும்ப அட்டைக்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை வழங்க வழிவகை செய்யுமாறும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்க வழிவகை செய்யும் நோக்கில், உரிய வழிமுறைகளை பின்பற்றி தருமபுரி மாவட்டத்தில் பிரதி மாதம் 2-ஆம் சனிக்கிழமை அன்று கணவனால் கைவிடப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளிகள், பழங்குடியினர்கள், நரிக்குறவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நாளது வரையில் குடும்ப அட்டை பெறாதவர்கள் அனைத்து வட்டத்திலும் வட்ட வழங்கல் பிரிவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொள்வர். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது அன்றே சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies