பென்னாகரம் பகுதி மக்கள் நெடுந்தூரம் சென்று வழக்கு நடத்த மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் பென்னாகரத்தில் சார்புநீதிமன்றம் அமைத்திட வலியுறுத்தி பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே.மணி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக சட்டத்துறை அமைச்சர் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதில் அமைச்சர் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் . நிகழ்வில் பாட்டாளி சமூக நீதிப் பேரவை மகாலிங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக