மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 மார்ச், 2022

மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி.

தருமபுரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

75-வது சுதந்திர தின விழா "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை" முன்னிட்டு தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க முகாம் கண்காட்சி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 24.03.2022 அன்று தொடங்கி 30.03.2022 வரை நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகியவை இணைந்து நடத்திய 75-வது சுதந்திர தின விழா "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா" மாரத்தான் ஓட்டப் போட்டி இன்று (29.03.2022) நடைபெற்றது. இம்மாரத்தான் ஓட்டப்போட்டியினை தருமபுரி சார் ஆட்சியர் திருமதி. சித்ரா விஜயன் இஆப., அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுடன் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இம்மாரத்தான் ஓட்டப்போட்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் தருமபுரி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இம்மாரத்தான் ஓட்டப்போட்டியானது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, தருமபுரி சாலை, பாரதிநகர், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை வழியாக தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. 

இம்மாரத்தான் போட்டியில் மாணவர்கள் பிரிவில் பங்கேற்ற தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் எஸ்.இளவரசன் முதலிடத்தினையும், எம். கார்த்திக் இரண்டாம் இடத்தினையும், எஸ்.பார்த்திபன் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர். மேலும், மாணவியர்கள் பிரிவில் பங்கேற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவி எஸ்.வீரேஸ்வரி முதலிடத்தினையும், அதியமான் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.உமா மகேஸ்வரி இரண்டாம் இடத்தினையும், தருமபுரி மாவட்ட விளையாட்டு விடுதி மாணவி ஆர்.ஸ்வாதி மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, ஏற்படாத துணிப்பைகளை பயன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்தின் சார்பில் இம்மராத்தான் ஓட்டப்போட்டி ல் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் டீ சர்ட்டுகள் மற்றும் மஞ்சள்பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர்.சாமுவேல் ராஜ்குமார், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் திருமதி. தே. சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. மு. அண்ணாதுரை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. ஜெ. முத்துக்குமார் உட்பட பள்ளி, கல்லூரி விளையாட்டு ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad