Type Here to Get Search Results !

பென்னாகரம் சட்டமன்ற அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி அவர்கள் பென்னாகரம் சட்டமன்ற அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பென்னாகரம்  பேரூராட்சி 18வது வார்டு கவுன்சிலர் சுமித்ரா சந்தோஷ் அவர்களின் சார்பாக எட்டியாம்பட்டி பகுதிக்கு புதிய நியாய விலைக்கடை  கட்டிடம் அமைத்து தருமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பாட்டாளி  மக்கள் கட்சி மாவட்ட தலைவர் செல்வகுமார், நகர பொறுப்பாளர் ஜீவா , செயலாளர்கள் ராசா உலகநாதன், முருகன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை சக்தி,  மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies