சாலையோர பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து, இலேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 மார்ச், 2022

சாலையோர பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து, இலேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த திருமல்வாடி அருகே சித்தனஹள்ளி கிராமத்தில் பஞ்சப்பள்ளி தண்ணீர் கொண்டு வர வெட்டப்பட்ட கால்வாயின் பாலம் உள்ளது இதற்க்கு தடுப்புச் சுவர் இல்லாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பல முறை மனுக்கள் கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு அவ் வழியாகச் சென்ற டிப்பர் லாரி ஒன்று பாலத்தில் மண் சரிவு ஏற்பட்டுத் தலைகீழாகக் கவிழ்ந்தது லாரியை இண்டூர் அருகே மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ மூர்த்தி (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார் லாரி தலைகீழாகக் கவிழ்ந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களோடு உயிர் தப்பினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad