சோமனஅள்ளி - கொல்லப்பட்டி சாலை பிரிவு தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 மார்ச், 2022

சோமனஅள்ளி - கொல்லப்பட்டி சாலை பிரிவு தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி இருந்து கொல்லப்பட்டிக்கு செல்லும் சாலை பிரிவில் தினந்தோறும் எரிந்துகொண்டிருந்த பல்பு திடீரென்று  வெடித்துள்ளது. 

20 நாட்கள் ஆகியும் பஞ்சாயத்து நிர்வாகம் வெடித்த பல்பு மாற்றாமல் இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தங்களுடைய தேவைக்காக தர்மபுரி பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் காலை வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீட்டுக்கு வருகின்றனர். கொல்லப்பட்டி சாலை பிரிவில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இருண்ட பகுதியாக இருப்பதால் வீட்டுக்குச்  செல்வதற்கு  அச்சம் அடைந்து வருகின்றனர். 

உடனடியாக கொல்லப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம்  பொதுமக்களின் நலனுக்காக வெடித்த பல்பு மாற்றி தெருவு பல்பு எரியும்படி சரி செய்து தரவேண்டும்  என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad