தேசிய முற்போக்கு திராவிட கழகம் தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் கலந்துகொண்டு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய புதிய அரசாங்கத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டல மாவட்ட, மாநில, கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக