Type Here to Get Search Results !

தனியார் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.

அன்னை கலை & அறிவியல் கல்லூரி மற்றும் அன்னை நர்சிங் கல்லூரி சார்பாக புகையிலை மற்றும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பேரணி அரூரில் நடத்தப்பட்டது. 

இதில் அரூர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.செந்தில்குமார், திரு.ஜெகதீஷ், திருமதி.பாத்திமா திரு.தங்கமணி, திரு.ஆனந்த் மற்றும் அரூர் காவல் ஆய்வாளர், காவலர்கள், அன்னை கலை & அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு C. வெங்கடாசலம் மற்றும் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தனர்.

பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள், அன்னை கலை & அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அன்னை நர்சிங் கல்லூரி மாணவர்கள் திரளாக பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் மாணவ மாணவியர்கள் புகையிலை மற்றும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றிய வாசகங்களை முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்கள் திரளாக பேரணியில் பங்கேற்றனர். 

பேரணியில் மாணவ மாணவியர்கள் புகையிலை மற்றும் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றிய வாசகங்களை முழக்கமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி பைபாஸ் சாலையில் துவங்கி சந்தைமேடு மற்றும் பேருந்து நிலையம் வழியாக சென்று கச்சேரி மேட்டில் முடிவடைந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies