மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 மார்ச், 2022

மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தடங்கம்.பெ.சுப்ரமணி, அவர்கள் முன்னிலை வகித்தார். சப்தகிரி கல்விநிறுவனங்கள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஜி.சேகர்,  அவர்கள் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக THE RAISING SUN நாளிதழ் EDITOR பேராசிரியர்.திரு.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நிகழ்சசியில் தருமபுரி நகராட்சி தலைவர் திருமதி.லக்ஷ்மி நாடான் மாது, துணைத் தலைவர் திருமதி.நித்தியா அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், மாநில ஆதிதிராவிடர் குழு துணைச் செயலாளர் கேஸ்.ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாட்டன் மாது, தங்கமணி, தர்மபுரி நகர திமுகழக பொறுப்பாளர் அன்பழகன், ஒன்றிய திமுகழக  செயலாளர் தனபால், சப்தகிரி கல்வி நிறுவனங்கள் துணைத்தலைவர் எம்.ஜி.எஸ்.வெங்கடேசன்,  திமுகழக நிர்வாகிகள், பொது மக்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.


தகடூர் குரல் நாவல்கள் படிக்க

கருத்துகள் இல்லை:

Post Top Ad