பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 மார்ச், 2022

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து பாலக்கோடு தொமுச தலைவர் சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி.தலைவர் சரவணன், சி.ஐ.டி.யு.தலைவர் கலாவதி, எச்.எம்.எஸ் தலைவர் முருகானந்தம் ஆகியோர்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொமுச செயலாளர் யுவராஜ், பொருளாளர் அமானுல்லா, சி. ஐ.டி.யுசி. செயலார் பசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் சி. ஐ.டி.யு, எச்.எம்.எஸ், ஏ.ஐ.டி.யு.சி மற்றும் தொமுச உள்ளிட்ட தொழிற்சங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கள் 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ளது. அதனையொட்டி பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, மின்சார திருத்த சட்டம் , அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைப்பு, பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர்.

தபால் நிலையத்தை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad