பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்த தோட்டக்கலை மாணவிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 மார்ச், 2022

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்த தோட்டக்கலை மாணவிகள்.

திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டியில், ஊரக  தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர்.

அதன் பகுதியாக தருமபுரி மாவட்டம், புலிக்கரை  கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில்  6  முதல் 8ஆம் வகுப்பு  பயிலும் மாணவர்களுக்கு  ' Social media addiction(சமூக வலைதளங்களுக்கு அடிமையாதல்) என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடத்தினர். 

இதில் சமூக வலைதளங்களினால் ஏற்படும் தீமைகள், செல்போனில் கேம் விளையாடுவதன் விளைவு, இவற்றால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் செல்போனை உபயோகிக்கும் முறைகள் குறித்து விரிவாக  மாணவர்களுக்கு அறிவுறித்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad