Type Here to Get Search Results !

கம்பாளப்பட்டி ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

அரூரை அடுத்த முத்தானூர் அருகே உள்ள கம்பாளப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீமஹா முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவின் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த 17ம் தேதி துவங்கிய விழா 

25,26,27 ஆகிய தேதிகளில் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், உள்ளிட்ட நிகழ்வுகள் தொடந்து நடைபெற்று வந்தன இந்நிலையில் இன்று ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவின்  விழாவின் நிறைவில் சுவாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள நடைபெற்றன.

இதனைதொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன, இந்த விழாவில் முன்னாள் உயர்கல்விதுறை துறை அமைச்சரும் வேளாண்மை துறை அமைச்சரும் பாலக்கோடு எம்எல்ஏவுமான  திரு.கே.பி.அன்பழகன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்க்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞரும்  தெற்கு ஒன்றிய செயலாளருமான  ஆர்.ஆர்.பசுபதி, சிற்றரசு, செண்பகம் சந்தோஷ், சிவன், ஒன்றிய குழு துணை தலைவர் அருண், வழக்கறிஞர் தவமணி, கூட்டுறவு தலைவர் வஜ்ஜிரம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர், கண்ணகி மாரியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, அன்பரசு,கிளைசெயலாளர் சீனு, கோவிந்தராஜ், மற்றும்  பக்தர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கலந்துகொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies