கடத்தூர் வட்டார சிஐடியு தொழிற்சங்க சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 மார்ச், 2022

கடத்தூர் வட்டார சிஐடியு தொழிற்சங்க சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கடந்த ஆண்டு முதல் பொது மக்களுக்கும் அதன் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பல சட்டங்களை   தன்னிச்சையாக செய்து வருகிறது இதை கண்டித்து நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் கடத்தூர் சிஐடியு, விடுதலை தொழிலாளர் முன்னணி, காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி, போன்ற தொழிற்சங்க அமைப்புகள் மத்திய  அரசுக்கு எதிராக பொதுமக்களுக்கு ஆதரவாகவும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தேசிய பணமாக்கும் கொள்கை தொழிலாளர் சட்டத் தொகுப்பு நூறு நாள் வேலைத்திட்டத்தை நகரங்களுக்கு விரிவு படுத்தவும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்றும் அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் புதிய மோட்டார் சட்டத்தை வாபஸ் பெறவும் என பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடத்தூர் ஏஐடியுசி மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மற்றும் விடுதலை தொழிலாளர் முன்னணி சார்பில் சென்ன கிருஷ்ணன்.

கடத்தூர் பேரூராட்சி விசிக துணைத்தலைவர் வினோத், கவுன்சிலர் மயில் வளவன், அன்புமணி, பாண்டியன், சிஐடியு சண்முகம், ஜெயக்குமார், ராஜா, தனுஷின் செல்வம் சுகதேவ், சக்தி, குப்பன் உள்ளிட்ட 200க்கு அதிகமான பெண்களும் ஆண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad