Type Here to Get Search Results !

சிங்கப் பெண் விருதுபெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, பரிசு வழங்கிய தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த  சின்னவத்தலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ்,சந்திரா ஆகியோரின் மகள் செளபரணி (வயது 14) இவர் சின்னவத்தலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

காந்தி ஜெயந்தி மற்றும் நேரு நினைவு நாளில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் சிறப்பிடம் பிடித்து பெற்ற பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சியரிடம்  நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரின் பாராட்டை பெற்றார்.கடந்த 13ஆம் தேதி மருதம் நெல்லி கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாணவி சௌபரணிக்கு சிங்கப்பெண் 2022 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிங்கப் பெண் விருதுபெற்ற மாணவி.சௌபரணிக்கு இன்று  தர்மபுரியில்  தகடூர் புத்தக பேரவையின் நிர்வாகி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் தகடூர் புத்தக பேரவையின் சார்பாக பாராட்டு  சான்றிதழும் பரிசும் வழங்கினார். 

உடன் தலைமையாசிரியர்.குமார், தகடூர் புத்தகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தங்கமணி.சசிகுமார் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் மாணவியை பாராட்டி ஒசூரை சேர்ந்த அண்ணாமலை 2000 ரூபாய் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies