தருமபுரி மாவட்டத்தில் 2022 2023 - ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 01.01.2021 முதல் 30.04.2022 நள்ளிரவு 11.59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் மற்றும் சேலத்தில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம்.
சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் :0427 2900142, மின்னஞ்சல் முகவரி : rjdtslm@gmail.com என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.