தர்மபுரி மாவட்டம் இண்டூர் போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது மளிகை கடைகளில் குட்கா விற்ற அதகப்பாடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). முனுசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று அதியமான்கோட்டை, தொப்பூர் போலீசார் கடைகளில் சோதனை நடத்தினர், அப்போது குட்கா விற்றதாக சின்னசாமி (33), சக்திவேல் (49), மதுராஜ் (41) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக