தமிழக நகராட்சி தேர்தலை முன்னிட்டு பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் களப்பணி குறித்து ஆலோசனை செய்ய அந்தந்த பகுதியில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது.
பென்னாகரம் பேரூராட்சி வார்டு எண் 13 -ல் கொல்லமாரியம்மன் கோவில் தெருவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் அவர்களால் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது, பின்னர் கொல்லமாரியம்மன் கோவில் தெருவில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜகணேஷ் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, மந்திரி, ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷன், M.முருகன், K.P.முருகன், அன்புராஜா மற்றும் நகர பொறுப்பாளர் ஜீவா, பாட்டாளி சமூக ஊடக பேரவையினை சார்ந்த அன்பு, சந்தோஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
.gif)
