கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு பள்ளியில் தமிழ் வழியில் 6-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயின்று தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீடான 15 சதவீதத்திற்கான மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்ட 21 மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி, அவர்கள் மருத்துவ உபகரணங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வி.கோவிந்தன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் சாத்விகா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக