Type Here to Get Search Results !

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸார் கொடி அணிவகுப்பு, எஸ்பி பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பேரூராட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் கொடி அணிவகுப்பு பேரணியில் நடைபெற்றது. இதில் இந்த பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி கலந்துக்கொண்டு பேரணியை துவக்கிவைத்தார்.

இதில் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர், ஊத்தங்கரை சராக காவல் ஆய்வாளர்கள் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜ், மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன், ஊத்தங்கரை  காவல் ஆய்வாளர் லட்சுமி, கல்லாவி காவல் ஆய்வாளர் பத்மாவதி, ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளர் பாலக்கிருஷ்ணன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் வசந்த், உளவுத்துறை போலீசார் அன்பழகன், சுப்பிரமணி, வடிவேல், அதிவிரைவு படை போலீஸார், பள்ளி மாணவர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். 

இந்த பேரணியானது ஊத்தங்கரை நான்கு வலிசாலையில் துவங்கி, ஊத்தங்கரையின் முக்கிய சாலைகள், தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று இறுதியில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது, பேரணி இறுதியில் காலர்களுக்கு அறிவுறுத்திய காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்கவும், காவல் துறை அவர்களுக்கு முழு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் எந்நேரத்திலும் உதவ தயாராக இருப்போம் என்பதை வெளிக்காட்டவே இந்த பேரணி எனவும் மேலும் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில், அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்பட, 100 க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies