Type Here to Get Search Results !

கோவில் நிலங்கள்; தனியார் பெயர்களை ரத்து செய்து மீண்டும் திருக்கோவில் பெயரில் பட்டா மாற்றம்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், P. கொல்லஅள்ளி கிராமப்புல எண்கள் 82 /2A, விஸ் 0.06.o hec, 82 /2B விஸ் 0.59.0 ஹெக், மற்றும் 8/8 விஸ் ஹெக் 0.75.0 (மொத்தம் 3.48 ஏக்கர்) ஆகிய புலன்கள் இனாம் பதிவேட்டின் படி தேடுகரகம் பெயரிலிருந்து, பின்னர் தனிநபர் பெயரில் பட்டா தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலங்கள் தனியார் பெயர்களை ரத்து செய்து மீண்டும் திருக்கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஆதிநாராயணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலுக்குச் சொந்தமான புல எண்கள் 234/1, 264, 269-ல் மொத்தம் 17.90 ஏக்கர் நிலம் நில உடமை மேம்பாடு திட்டத்திற்கு முன்பு ஆதிநாராயணசாமி தேவதாயம் என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள், நில உடமை மேம்பாடு திட்டத்திற்குப் பின்னர் பல உட்பிரிவுகளாக்கப்பட்டு தனிநபர்கள் பெயர்களில் பட்டா தாக்காலகியிருந்தது. 

இதனை ரத்து செய்து திருக்கோயில் பெயரில் தாக்கலாகியிருந்த நிலங்களை ரத்து செய்து அருள்மிகு ஆதிநாராயணசாமி (தேவதாயம்) பெயரில் தாக்கல் செய்து ஆணையிடப்பட்டதன் தொடர்ச்சியாக, சுவாதீனம் எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.4.60 கோடி ரூபாய் ஆகும்.

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies