தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 3-ந் தேதி வீட்டில் வைத்து பழனிசாமி விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக