பூ வியாபாரி விபத்தில் பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

பூ வியாபாரி விபத்தில் பலி.

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நெல்லிநகரை சேர்ந்தவர் பூ வியாபாரி காளியப்பன் (வயது .57) இவர் தர்மபுரி பஸ் நிலையத்தில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு பாலக் கோட்டில் உள்ள தனது தாயாரை பார்க்க மோட்டார் சைக்கிளில் தர்மபுரியிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கர்த்தான்குளம் அருகே வந்த போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி காளியப்பன் உயரிழ்ந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad