Type Here to Get Search Results !

ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கான காப்பீடு; விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு.

தருமபுரி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022-ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு உடன் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்சினி.ச., இஆப., அவர்கள் தகவல் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கான காப்பீடு, பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கத்திரி, வெண்டை, தக்காளி ஆகிய தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 15.02.2022 ஆகும். மேலும், வாழை, மரவள்ளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 28.02.2022 ஆகும். மேற்குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம்.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றே பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்கள் பெற விவசாயிகள் தருமபுரி மாவட்டத்தில் தங்கள் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி , இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies