Type Here to Get Search Results !

தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் மக்கள் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த அரசுப் பள்ளி மாணவி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சின்ன வத்தலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ், சந்திரா ஆகியோரின் மகள் செளபரணி (வயது 14). இவர், சின்ன வத்தலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். காந்தி ஜெயந்தி மற்றும் நேரு நினைவு நாளில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் சிறப்பிடம் பிடித்து பெற்ற பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சியரிடம்  நிவாரண நிதிக்கு வழங்கிய அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா சின்னவத்தலாபுரம் அரசுப் பள்ளியில்  கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியை கௌரவிக்கும் வகையில் ராம கொண்ட அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தங்கராஜ் ரூபாய் 5000 பரிசாக  வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இந்நிலையில் மாணவி  செளபரணி தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் பெரிய வத்தலாபுரம் கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மக்கள் நூலகத்திற்கு ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான பொதுஅறிவு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட புத்தகங்களை இன்று பெரிய வத்தலாபுரம் மக்கள் நூலகத்தில்  நேரில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் செல்லமுத்து, சோளப்பாடி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கமலேசன், ஆர் ரகு பிரசாத், குணசேகரன், மக்கள் நூலகம் சார்பில் தாமரைச்செல்வன், இளையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies