தமிழ்நாடு முழுவதும் நகர்புற ஊள்ளாட்சி மன்ற தேர்தல் வருகின்ற 19 ம் தேதி நடைப்பெற இருக்கிறது. இதனையொட்டி இரவு நேரங்களில் கூட அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி 2 வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி சென்னம்மா ரமேஷ் அவர்கள் எம்.கே.நகர், புது காலணி, கிருஷ்ணாபுரம் காலணி, போன்ற பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.
அதேபோல் 13 வது வார்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் திரு ராஜகணேஷ் தங்கமணி அவர்கள் கொல்லமாரியம்மன் கோவில் தெருவில் வீடு வீடாகச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர் இந்நிகழ்வில் பாமக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் ஜீவா, மற்றும் பிரஷ் மணிவண்ணன் பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
.gif)
