மேலும் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளதையும், பூத் சிலிப் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தேதிகளில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதை கண்காணிக்கவும், தபால் வாக்குகள் உரியவர்களுக்கு படிவம் வழங்குவதை கண்காணிக்கவும், வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதை கண்காணிக்கவும், மாவட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து பெறப்படும் புகார்களின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதை கண்காணிக்கவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, ஆப. அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் மூன்றாவது ஒதுக்கீட்டில் பணிகள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 10.02.2022 தேதியன்று முடித்திடவும், வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள், பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்காணித்திடவும் மண்டல அலுவலர்களுக்கு மாவட்டதேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, ஆப, அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தருமபுரி நகராட்சி ஆணையாளர் 7 தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.சித்ரா சுகுமார் மற்றும் 1௦ பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் 7 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஒன்றிய பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)
