ஆண் வேட்பாளர் பாலினத்தில் பெண் என குறிப்பிட்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

ஆண் வேட்பாளர் பாலினத்தில் பெண் என குறிப்பிட்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 15 வார்டுகளில் நேற்றுமுன்தினம் 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.நேற்று வேட்புமனு பரிசீலனையின் போது 92 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக தேர்வுநிலை பேரூராட்சி தேர்தல் அதிகாரிகள் அறிவித்த நிலையில் தற்போது 15வது வார்டில் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த குமரேசன் வயது 47 என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அரசியல் காரணமாக பாமகவில் இருந்து திமுகவுக்கு மாறி திமுகவில் போட்டியிடுவதாக அதே 15வது வார்டில் மற்றொரு வேட்புமனுவும் குமரேசன் தாக்கல் செய்துள்ளார் திமுக சார்பில் போட்டியிடுவதாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவிலும் அதேபோன்றுதான் என்பதற்கு பதிலாக பெண் எனவும் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ஆண் என்ற பாலினத்திற்கு பதிலாக பெண் என்ற பாலினம் குறிப்பிட்டதாகவும் அதை சரி பார்க்காமல் தேர்தல் அதிகாரிகள் பரிசிலனையில் கண்டுகொள்ளாமல் ஆன்லைனில் பதிவேற்றி உள்ளது சர்ச்சையை ஏற்பட்டுள்ளது இதனால் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர் குறித்து மற்ற கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது 

கருத்துகள் இல்லை:

Post Top Ad