மாற்றுகட்சியில் இருந்து விலகி விசிகவில் 50 பேர் இணைந்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

மாற்றுகட்சியில் இருந்து விலகி விசிகவில் 50 பேர் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியம் மல்லசந்திரம் கிராமத்தில் நடைப்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழாவில், மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகிய 50பேர் விசிகவில் இணைந்தனர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சூளகிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மல்லசந்திரம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய முகாம் அமைக்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைப்பெற்றது.

சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் வேப்பனஹள்ளி தொகுதி செயலாளர் செம்பட்டி சிவா, விசிக கொடியேற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேப்பனஹள்ளி தொகுதி துணை செயலாளர் முனிச்சந்திரன்,ஒன்றிய பொருளாளர் கார்த்தி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் முனியப்பா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad