கிராம கோவிலுக்கு உற்சவர் சிலையை அன்பளிப்பாக கொடுத்த எம் எல் ஏ. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

கிராம கோவிலுக்கு உற்சவர் சிலையை அன்பளிப்பாக கொடுத்த எம் எல் ஏ.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி காந்திபுரத்தில் ஓங்காளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலில்  ஓங்காளியம்மன் உற்சவர் இல்லாத காரணத்தால் அந்த பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்  மதியழகனிடம் கோரிக்கை வைத்தார். 

கோரிக்கையை ஏற்று  தனது சொந்த செலவில்  உற்சவர் ஓங்காளி அம்மன்  கொடுக்கும் நிகழ்ச்சியில்  சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு சுவாமி சிலையை அந்த பகுதி பொதுமக்களிடம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad