கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில் இன்று மாசி மாத வெங்கடேஸ்வரா தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
கடந்த வாரம் வெள்ளி கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா வெங்கடேஸ்வரா சுமாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் நடைபெற்று தினமும் ஊர்வலமாக வந்து சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து இன்று பிரமோஷ்சவத்தை முன்னிட்டு காலை முதலே கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இதையடுத்து இன்று மாலை சுவாமிக்கு சிறப்பு அங்கராத்துடன் தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துனர்.
இதையடுத்து பூதிமுட்லு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
.gif)
