5 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சா பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 பிப்ரவரி, 2022

5 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சா பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு ரகசிய தகவலின் படி உத்தனப்பள்ளி - இராயக்கோட்டை சாலை துப்புகானப்பள்ளியில் பேருந்து நிறுத்தம் அருகே ரூபாய் 5 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ கஞ்சா  போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணையில் தீர்த்தம் கிராமத்தை சேர்ந்த கிட்டப்பா மகள் முனியம்மா என்பவரிடம் இருந்து 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை வினியோகம் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவர்கள் மீது கடுமையான குண்டர் சட்டத்தில் கைது செய்யபடுவார்கள் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரிக்கை படுத்தபட்டது. 


கருத்துகள் இல்லை:

Post Top Ad