தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கடந்த 26 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி வெளியிடப்பட்டு 28 தேதி முதல் பிப்ரவரி 4 தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.பிப்ரவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையோட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி 9 வது வார்டு செக்மேடு போட்டியிடும் பாமக வேட்பாளர் சத்தியமூர்த்தி மனு தாக்கல் செய்தார் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார்,முன்னாள் மாவட்ட துணை சேர்மேன் C.V.மாது ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன் ராசா உலகநாதன் முருகன் மந்திரி பாட்டாளி இளைஞர் சங்கம் நீர்குந்திமாது, நகர செயலாளர் ஜீவா, ஆகியோர் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக