Type Here to Get Search Results !

காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 3 சிறுவர்கள் மீட்பு.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாளையம்புதூர் குறிஞ்சி நகரில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது, இந்த காப்பகத்தில் ஆதரற்ற சிறுவர்-சிறுமிகள் மற்றும்,  மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள், குழந்தை திருமண சிறுமிகள் ஆகியோர் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிதியுதவியுடன் பிளஸ் 2 வரை வகுப் புகள் நடந்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவில் இந்த காப்பகத்தில் தங்கியிருந்த 3 சிறுவர்கள், சுவர் ஏறி குதித்து தப்பி சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரப்பா என்பவரின் மகன் கிருஷ்ணன் (வயது 12), ஓசூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் ஆஞ்சியப்பன் (12), தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பட்டாபி நகரை சேர்ந்த சக்திவேல் (12) ஆகிய 3 சிறுவர்கள் காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியாக விளங்கும் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு இந்த 3 சிறுவர்களும், காப்பகத்தில் உள்ள காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து தப்பி சென்றனர், இதுபற்றி தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிறுவர்கள் ஆஞ்சியப்பன், கிருஷ்ணன் ஆகிய 2 சிறுவர்களையும் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோடு பகுதியில் தொப்பூர் போலீசார் மீட்டனர். இந்த 2 சிறுவர்களின் பெற்றோர்களும் திருச்செங்கோடு பகுதியில் வேலை பார்த்து வந்ததால், பெற்றோர்களை பார்க்க சென்றது தெரிய வந்தது.

இதேபோல் சிறுவன் சக்திவேலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட 3 சிறுவர்களையும், தொப்பூர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies