இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளிக்கு அப்பகுதியில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சுமார் 32 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு 15 வருடங்களுக்கு முன்பாக புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன அப்போது வகுப்பறைக் கட்டிடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் கட்டிடங்கள் பழுதடைந்தது.
அதனையடுத்து 2009-ம் ஆண்டு சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக் கப்பட்டன. இருப்பினும் சீரமைப்பு பணிகளும் சரிவர மேற்கொள்ளபடாததால் பள்ளி மேற்கூரைகள் அவ்வப்போது உடைந்து விழுந்து வருகின்றன. மேலும் மேற்கூரைகள் விரிசல் அடைந்துள்ளதால் மழைக் காலங்களில் பள்ளி வகுப்பறையிலேயே மழை நீர் ஒழுகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது பாக்கெட்கள் பாத்திரங்களை வைத்து மழைநீர் ஒழுகும் இடங்களில் வைத்து வகுப்பறையில் மழை நீர் தேங்காதவாறு தடுத்து வந்துள்ளனர். வகுப்பறை கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து ஏற்கனவே துறை சார்ந்த அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பெற்றோர் கூறுகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் அப்பள்ளியின் சுற்றுச் சுவரும் மிகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் உடைந்து விழுந்து விட்டன. தரமில்லாத கட்டு மானப் பொருட்கள் மற்றும் லாப நோக்கில் செயல்படும் ஒப்பந்ததாரர்களிடம் இதுபோன்ற அரசு கட்டிடங்களை ஒப்பந்தம் வழங்கும் பொழுது அவர்களின் அரைகுறை பணிகளால் அரசு கட்டிடங்கள் மற்றும் சுற்றுச் சுவர்கள் மோசமான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக