Type Here to Get Search Results !

வரும் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் அருள்மிகு புதூர் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி 16.02.2022-ஆம் தேதி புதன்கிழமை பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 26.02.2022 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது, இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 (under Negotiable Instruments Act, 1881)-ன்கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று, பாலக்கோடு சார்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies