தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பெங்களுருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வட்ட வழங்கல் அலுவலர் முல்லை கொடிக்கு இரகசிய தகவல் கிடைத்து.
இதனை தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் பாலக்கோடு அருகே ஜோதி அள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராணி (38) என்பவரது வீட்டில் 20 மூட்டை ரேஷன் அரிசி 1 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர் முல்லைகொடி பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தார்.
.gif)
