
தமிழர்களின் வீர விளையாட்டான வெற்றுகால் சேவல் சண்டையை சில மாவட்டங்களில் நடத்திக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததின் அடிப்படையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி வள்ளல் அதியமான் வெற்றுக்கால் சேவல் வளர்ப்போர் சங்கம், வேல் பால் டிப்போ அணி மற்றும் மர மில் அணி ஆகிய அணிகளின் சார்பில், தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ள, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போன்ற வெற்றுகால் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
